புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு

தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது. அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்பதை கைத்தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப்படுத்துகிறது.
இந்த தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் http://www.site2sms.com/userregistration.asp உங்களது பெயர், பாலினம், மின்னஞ்சல், தொழில், மாநிலம், கைபேசி எண், கடைசியாக உங்கள் city name ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவு செய்து முடித்தவுடனே உங்கள் கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .
 
அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
011-47606762 Or Mail us on support@site2sms.com.
  1. அதன்பின் டாஸ் போர்டுக்கு செல்லுங்கள். Settings Page-க்கு செல்லுங்கள்.
  2. அந்த பக்கத்தில் எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ் வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள்.
  3. eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள்.
  4. அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
  5. login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP ".
  6. forward a copy of incoming mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை(123456789012@site2sms.com) கொடுக்கவும்.
  7. உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மின்னஞ்சலை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  8. இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் கைபேசிக்கும் வரும்.