இப்படியும் ...சுத்தப்படுத்தலாமா ???

தூய்மை இந்தியா ...பணி 
நமது மாவட்டத்திலும் ...அனைத்து தொலைபேசி நிலையத்திலும் ...
தாமே  குப்பையை கொட்டி ...அந்த குப்பையை அப்புறபடுத்தல் இல்லாது ...
மண்டி கிடந்த செடி கொடிகள் ...புதர்கள் அப்புறப்படுத்தல்   என ...
மாவட்டம் முழுவதும் தூய்மை இந்தியா செவ்வனே நிறைவேறியது ...

ஆனால் ...நாகை தொலைபேசி நிலையத்தில் ...
தூய்மைபடுத்துவோம் ...என்பதை ..துடைத்தெடு ...
என ...தெளிவாக புரிந்துகொண்டு ...
அங்கிருந்த ...டேபிள் ...சேர் ...பீரோ ...
SCRAPPING  குவியலை ...
வீட்டுக்கு எடுத்து சென்று தூய்மைப்படுத்தியுள்ளனர் ...
ஏலம் என எந்த அறிவிப்பும் இல்லை ...
சுற்றறிக்கை  இல்லை ...
நமக்கு நாமே என ...சிலரே  பங்கு பிரித்து தூய்மைப்படுத்தி உள்ளனர் ..

நமது நாகை கிளைசெயலர் ...எதிர்த்து குரல் எழுப்பியதும் ...
JTO வீட்டுக்கு சென்றிருந்த சீர்வரிசை பீரோ ...
மீண்டும் தொலைபேசி நிலையம் வந்து சேர்ந்தது ...

BSNL சொத்தை ...அதன் பாதுகாவலர்களே ...
கழுத்தை அறுத்து ...வழிபறி செய்வது ...
வக்கிரத்தின் ...உச்சம் ...

நீதி ..கேட்டும் ...
கொள்ளை தொடராது இருக்கவும் ...
நாகையில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் ...
திரள்வோம் ...BSNL  காக்க !