
மாடு மேய்ப்பவர் போல் தெரிகிறதா ? ஆம் அந்த பணி தான் அவர்க்கு , மாடு மேய்க்க சென்றவுடன் மரத்தடியில் ஆழ்ந்த சிந்திக்க தொடங்கிவிடுவார் கும்பமுனி . அந்தி சாயும் வேலையில் வீடு திரும்பும் போது தான் சிந்தித்த விஷயங்களை தன் ஒரே சொந்தமான வாயில்லா ஜீவன் மாட்டோடு கேள்வி கேட்டு வீடு திரும்புவார் . கேள்வி என்றால் எப்படி ? எகிப்தபுரட்சிபற்றி , S பேண்ட் குறித்தும் , குவார்ட்டர் கட்டிங் தமிழ் வார்த்தையா ? எனவும் , தமிழக மீனவர் குறித்தும் , பிரதமர் நேர் சந்திப்பு குறித்தும் , இவர் சிந்திக்காத விசயமே இல்லை எனலாம் ,இனி அடிக்கடி நம் இணையத்தில் தோன்றி சந்தேகம் எழுப்புவார் . அது சில நேரங்களில் விவரமாய் இருக்கும் , நக்கலாகவும் , லொள்ளு பிடித்தாய் இருக்கும் . அது சரி அது என்ன கும்பமுனி , பெயர் காரணம் என்ன ?குடந்தையில் உருவான கேரக்டர் எனவே( கும்ப) , சூடிய பூ சூடற்க சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனின் கேரக்டர் ( கும்ப முனி)வேறுஒன்றுமில்லை சரி விகிதத்தில் அரசியல் , தொழிற்சங்கம் , இலக்கியம் ,என அனைத்தும் கலந்து இருக்கும் ..!விமர்சனம் வரவேற்க்கிறோம்