Skip to main content
வணக்கம் நீங்கள் மேல் பார்ப்பது , நபர் பெயர் கும்பமுனி

மாடு மேய்ப்பவர் போல் தெரிகிறதா ? ஆம் அந்த பணி தான் அவர்க்கு , மாடு மேய்க்க சென்றவுடன் மரத்தடியில் ஆழ்ந்த சிந்திக்க தொடங்கிவிடுவார் கும்பமுனி . அந்தி சாயும் வேலையில் வீடு திரும்பும் போது தான் சிந்தித்த விஷயங்களை தன் ஒரே சொந்தமான வாயில்லா ஜீவன் மாட்டோடு கேள்வி கேட்டு வீடு திரும்புவார் . கேள்வி என்றால் எப்படி ? எகிப்தபுரட்சிபற்றி , S பேண்ட் குறித்தும் , குவார்ட்டர் கட்டிங் தமிழ் வார்த்தையா ? எனவும் , தமிழக மீனவர் குறித்தும் , பிரதமர் நேர் சந்திப்பு குறித்தும் , இவர் சிந்திக்காத விசயமே இல்லை எனலாம் ,இனி அடிக்கடி நம் இணையத்தில் தோன்றி சந்தேகம் எழுப்புவார் . அது சில நேரங்களில் விவரமாய் இருக்கும் , நக்கலாகவும் , லொள்ளு பிடித்தாய் இருக்கும் . அது சரி அது என்ன கும்பமுனி , பெயர் காரணம் என்ன ?குடந்தையில் உருவான கேரக்டர் எனவே( கும்ப) , சூடிய பூ சூடற்க சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனின் கேரக்டர் ( கும்ப முனி)வேறுஒன்றுமில்லை சரி விகிதத்தில் அரசியல் , தொழிற்சங்கம் , இலக்கியம் ,என அனைத்தும் கலந்து இருக்கும் ..!விமர்சனம் வரவேற்க்கிறோம்


Popular posts from this blog

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

பாசிசம் ஒழிக

சினிமாவில் கூட ஒரு கொடூரமான வில்லனை காட்ட இப்படி ஒரு காட்சி வைக்க முடியாது. Exaggeration என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கொடூரம். இந்த நாடு எங்கே செல்கிறது? பாசிசம் ஒழிக  

யூனியன் பேங்க் நமக்கு லோன் தருவதை விட மிச்ச வேலையெல்லாம் நல்லா தான் பாக்குறான்!