BSNLEU-யின் தீமை கொல்ல நாணம் என்ன ... ? ?
தோற்றவர்கள் வழக்காடு மன்றம் ஓடுகிறார்கள் என நியாயம் பேசுகிறார்கள் சிலர்..? அகில உலகத்திலும் இல்லாத புதிய முறையையா NFTE கேட்கிறது? வெறும் 46.57 % சத வாக்குகளை பெற்று வெற்றி வெற்றி என கூச்சலிடுவதை பற்றியெல்லாம் கவலயில்லை..!! 46.57% சத வாக்குகளை BSNLEU பெற்றுள்ளது என்றால் BSNL-ல் 54% சத ஊழியர்கள் BSNLEU இன் எதிராக உள்ளார்கள் என்பது தான் பொருள். ஒரே சங்கம் என்றால் அது 51% சத வாக்கினை பெற்றிருக்கவேண்டும். இந்த தர்க்க நெறி (LOGIC ) அடிப்படையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு NLC பொதுத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பின் வழிகாட்டல் சாராம்சம் " எண் கணக்கில் முதல் இடம் பிடித்த சங்கத்திற்கும் 51% சதம் இல்லையெனில் 2வது இடம் பிடித்த சங்கத்தையும் அங்கீகரிக்கவேண்டும், இரு சங்கங்களும் சேர்ந்தபிறகு 51% சத பிரதிநிதித்துவம் எட்டப்படவில்லையெனில், 3-வது இடத்தை பிடித்துள்ள சங்கத்திற்கும் அங்கிகாரம் தரலாம் " இதுவே NLC-ல் தந்திட்ட நீதிமன்ற வழிகாட்டல்.
இது BSNL-க்கு பொருந்தாதா .... ?
"நீதி மன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுவது ஜனநாயக விரோதமா.....? "
அதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம் ..... புறந்தள்ளுவோம், கணக்கு , புள்ளி விபரங்களையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு தோழனை, தோழியரை, எல்லாம் அறிந்தோரை நோக்கி
என் கேள்வி இது தான் ..... ! சென்ற வருட போனஸ் உடன் - வரும் ஆண்டு போனஸ் - வாங்கிதருவோம் என உலகில் எவரும் சொல்லாத பொய் சொல்லி ( தோழர் செல்லப்பா குடந்தையில் சொன்னது ) வாக்கு பெற்ற ........ BSNLEU -
VRS குறித்து குழு 01.02.2011-ல் அமைக்கப்பட்டு இன்று வரை இந்த நிமிடம் வரை அது குறித்து மௌனம் காக்கும் குழி பதுங்கிகள் .......
தனக்கு வாக்களிக்கவில்லையென குன்னூரில் SNATTA இளம் தோழர்களை கண்முடித்தனமாய் தாக்கிய இவர்களை அப்புறப்படுத்த
தீமை கொல்ல நாணம் என்ன ....... ? ? ?