Skip to main content
BSNL நிர்வாகத்தின் சித்து விளையாட்டு
நடந்தேறிய தேர்தலில் BSNLEU சங்கம் மொத்த வாக்குகளிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் கூட 50% சதிவீத வாக்குகளை பெறவில்லை. ஆனால் இம்முறை NFTE இயக்கம் 11 மாநிலங்களில் மற்றும் பல SSAகளில் முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 50% சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற்ற BSNLEU சங்கத்திற்கு அங்கிகாரம் தந்துள்ள கடிதத்தில் BSNL SR CELL - ஒத்துகொண்ட CODE OF DISCIPLINE என்று விஷமத்தானமான வார்த்தையை புகுத்தியுள்ளது. பத்தாம் பசலி CODE OF DISCIPLINE யை ஏற்க வில்லை என்று சொல்லி 11 சங்கங்கள் வெளி நடப்பு செய்தன. ஏற்கிறோம் என எந்த விதமான ஒப்புதல் கடிதமும் தரவில்லை. இதனை கண்டித்து நமது பொதுச் செயலர் CMD க்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இரண்டாவது சங்கத்திற்கு அங்கீகாரம் வலியுறுத்தி 21.02.2011. அன்று கடிதம் எழுதியுள்ளார்.
கடித நகல் CLICK HERE
தோழமையுடன்
R. ஜெயபால்
மாநில துணை தலைவர்

Popular posts from this blog

சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  AIBSNLEA  வேலூர் மாநில மாநாடு -புதிய மாநில சங்க நிர்வாகிகள்  தலைவர் : தோழர் .T .தமிழ் செல்வன் SDE -சேலம்  செயலர் : தோழர் .C .துரையரசன் CAO -தஞ்சை   பொருளர் : W  V  ரங்கநாதன்  AO -சென்னை  மற்றும்  குடந்தை மாவட்ட தோழர் B .குரு மூர்த்தி JAO  மாநில செயற்குழு உறுப்பினர்  சங்க பணி  சிறக்க வாழ்த்துக்கள் .

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

ஏணியை கூரை மீது போடாது வானத்தை நோக்கி நிறுத்துவோம் !

தேர்தல் ... அது சிம்மாசனத்தை கவிழ்த்திருக்கிறது  கவிழ்ந்தவனை நிமிர்த்தி சிம்மாசனத்தில் அமரவைதிருக்கிறது ... அமர்ந்தவன் தானே என்றான் ... தூக்கி வீசி பாடம்  சொல்லி இருக்கிறது . BSNLEU  சங்கம்  சந்தா செலுத்தும்  உறுப்பினர்  1,14,534 வாக்கும் எல்லாம் தனக்கே என்ற கணித சூத்திரம் பொய்த்துப்போனது ! NFTE  சங்கம் BSNLEU வின்  எதிர் வினை வாக்கை  தன்  வசம் ஈர்த்துள்ளது .... BSNLEU சங்கம் தனது தேர்தல் முடிவு அறிக்கையில் ... " NFTE  தேர்தல் பிரசாரம் எல்லாம் கேட்டோம் ... அதையெல்லாம்  தீர்த்து வைக்கிறோம்  என அறிக்கை கூட விடவில்லை ! BSNLEU  என்ன நினைத்து  இருக்கிறது என்றால் ? BONUS  தொழிலாளி விரும்பவில்லை ! LTC விரும்பவில்லை ? அதை போல இழந்த  எதுவும் விரும்பவில்...