Skip to main content
குடந்தையில் தலைவன் O.P. குப்தா
NFTE என்றும் - எப்படியும் - எந்த நிலையிலும் - துளிர்த்து கொண்டே இருக்கும் என்பதன் அதட்சிக்கான கூட்டம்
உற்சாக துள்ளலோடு குடந்தை குலுங்கியது தலைவனை வரவேற்று குடந்தை நகர் வீதிகளில் முழக்கத்தோடு தொலைபேசி நிலையம் வரை வரவேற்பு இனிப்பு களோடு பாசமாய் தலைவனை சந்தித்தனர் தோழர்கள். காரைக்குடி, திருச்சி, கடலூர், தஞ்சை, பட்டுகோட்டை, என பக்கத்துக்கு மாவட்ட பாச கூட்டம் சிலர் சிலர் G. கலியமூர்த்தி மாவட்ட துணை செயலர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைவரையும் வரவேற்று சிறப்புரை வழங்கினார். குடந்தை தோழர் S. பாஸ்கரன் மாவட்ட செயலர் சிறப்பான துவக்க உரை வழங்கினார் தோழர் மாரி காரைக்குடி :- NFTE ஐ தோற்றுப்போன கூட்டம் என்கிறார்கள் - குடந்தை வந்துபார்த்தால் - நெஞ்சு நிமிர்த்தி உற்சாகத்தோடு NFTE - தலைதொங்களோடு BSNLEU . தோழர் பிரின்ஸ் தஞ்சை :- எந்த நிலையிலும் தஞ்சையும் NFTE ஐ தூக்கிபிடிக்கும். தோழர் ஜெயராமன் மாநில பொருளாளர் கடலூர்:- தலைவன் குப்தா வின் 100 வயது நிறைவு விழாவையும் குடந்தையில் கொண்டாடுவோம் தோழர் சேது மதுரை :- எனது தந்தையின் பெயரை விட அதிகம் உச்சரித்தது தலைவன் குப்தாவின் நாமம் தான் தோழர் ஆர்.கே. :- NFTE தோற்கவில்லை - அடுத்த கட்ட உரிமை கோரல் போராட்டத்தை தொடங்கிஉள்ளது. குப்தா வின் பென்சனை எவனும் கைவைக்க அனுமதிக்கமாட்டேன் மீறி கைவைத்தால் கை வைத்தவன் கையை ............ என்று சிங்க முழக்கம் இட்டார் 90 வயதில் குப்தா போராட வாருங்கள் என்றால் நமது வயதுக்கு நாம் எப்படி போராட வேண்டும் நியாய கேள்வி வினவினார். "தொழிற்சங்க அகராதியில் என்ன வேண்டுமானாலும் செய்" என்பதன் தெளிவுரையும் தந்தார்.
தலைவன் O.P. குப்தா :-
தமிழகம் வந்து உங்களை எல்லாம் காணாது செல்வதா ....? என வாஞ்சையோடு தனது உரையை தொடங்கினர். தனக்கு இயக்க தலைமை பொறுப்பை ஏற்க உத்தரவு வந்ததையும் அக்கால சுழலில் தனது பணி தொடக்க நிலையையும் நினைவுகூர்ந்தார். தற்பொழுது BSNL-இல் உள்ள இளைஞர்களை பற்றிய கவலையுணர்வு மேலோங்கிஇருந்தது. செப்டம்பர் 2000-பென்ஷன் வரம் பெற்ற வரலாற்றை விளக்கினார் உங்களையல்லாது யாராலும் முடியாது என சிலாகித்தார். நம்புதிரியீன் இரண்டு நாள் வேலைநிறுத்தம் - கோரிக்கை என்னவென்று புரியாது - எப்படி முடிப்பது எனவும் தெரியாது CMD யிடம் போய் முடித்து கொண்ட போராட்டம் குறித்து வருந்தினர். நம்புதிரி வேலைநிறுத்தம் செய்தால் அமைச்சர் CMD ஜ அனுப்பி முடித்து கொண்டார். NFTE வேலை நிறுத்தம் செய்தபொழுது பிரதமர் வாஜ்பாய் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானைஅனுப்பி தீர்த்து வைத்தார் இது தான்NFTE என உச்சி மொகர்ந்தார். இறுதியாய் குடந்தை பிரகடனமாய் பதவிஉயர்வு - ஊதியம் - பென்ஷன்- கேசுவல் ஊழியர் பிரச்னை களை முன்னிறுத்தி வேலை நிறுத்த அறைகூவல் விடுப்பேன் என சூளுரைத்தார். குறிப்பாக அனைவரையும் அரவணைத்து என உறுதிபட தெரிவித்தார். மிண்டும் சந்த்திப்போம் என விடைபெற்றார்.
தோழர் C. கணேசன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. குப்தாவின் வருகையால் குடந்தை சிறப்புற்றது.

Popular posts from this blog

சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  AIBSNLEA  வேலூர் மாநில மாநாடு -புதிய மாநில சங்க நிர்வாகிகள்  தலைவர் : தோழர் .T .தமிழ் செல்வன் SDE -சேலம்  செயலர் : தோழர் .C .துரையரசன் CAO -தஞ்சை   பொருளர் : W  V  ரங்கநாதன்  AO -சென்னை  மற்றும்  குடந்தை மாவட்ட தோழர் B .குரு மூர்த்தி JAO  மாநில செயற்குழு உறுப்பினர்  சங்க பணி  சிறக்க வாழ்த்துக்கள் .

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

ஏணியை கூரை மீது போடாது வானத்தை நோக்கி நிறுத்துவோம் !

தேர்தல் ... அது சிம்மாசனத்தை கவிழ்த்திருக்கிறது  கவிழ்ந்தவனை நிமிர்த்தி சிம்மாசனத்தில் அமரவைதிருக்கிறது ... அமர்ந்தவன் தானே என்றான் ... தூக்கி வீசி பாடம்  சொல்லி இருக்கிறது . BSNLEU  சங்கம்  சந்தா செலுத்தும்  உறுப்பினர்  1,14,534 வாக்கும் எல்லாம் தனக்கே என்ற கணித சூத்திரம் பொய்த்துப்போனது ! NFTE  சங்கம் BSNLEU வின்  எதிர் வினை வாக்கை  தன்  வசம் ஈர்த்துள்ளது .... BSNLEU சங்கம் தனது தேர்தல் முடிவு அறிக்கையில் ... " NFTE  தேர்தல் பிரசாரம் எல்லாம் கேட்டோம் ... அதையெல்லாம்  தீர்த்து வைக்கிறோம்  என அறிக்கை கூட விடவில்லை ! BSNLEU  என்ன நினைத்து  இருக்கிறது என்றால் ? BONUS  தொழிலாளி விரும்பவில்லை ! LTC விரும்பவில்லை ? அதை போல இழந்த  எதுவும் விரும்பவில்...