13.09.2011 அன்று ஒரு நாள் உண்ணாவிரதம்: மெடிகல் அலவன்ஸ் நிறுத்தம், LTC இரண்டாண்டுகளுக்கு நிறுத்தம் மற்றும் ஈட்டிய விடுப்பை LTC -இல் செல்லும் போது காசாக்குவது நிறுத்தம் ஆகியனவற்றை கண்டித்து 06.09.2011 அன்று ஆர்பாட்டம் நடத்தினோம். அடுத்தகட்ட போராட்டமாக நமது அகில இந்திய சங்கம், 13.09.2011 அன்று மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. போராட்டத்தை வெற்றிகரமாக்கி நமது கோரிக்கையை வென்றெடுக்க, கிளைச்செயலர்கள் மற்றும் தோழர்கள் பெருமளவில் எழுச்சியுடன் பங்கேற்குமாறு மாவட்டசங்கம் கேட்டுக்கொள்கிறது.

போராட்ட வாழ்த்துக்களுடன்

NFTE - மாவட்ட சங்கம்